6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி நீடிக்கிறது: முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி நீடிக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

News image
தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி நீடிக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Updated On :27 டிசம்பர் 2020, 2:09 pm

DIN

சிதம்பரம்: தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி நீடிக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடலூர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜகவின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்தது: தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி நீடித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கட்சியையும் வலுப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு கட்சியினரும் செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் கட்சித் தொண்டர்களை ஊக்கப்படுத்துவதற்காக சில விஷயங்களை பேசுகிறார்கள். இதை குற்றம் என்று சொல்ல முடியாது. அதிமுக அமைச்சர்களும் அதுபோல் பேசியிருக்கலாம். அதிமுக என்பது ஒரு தனி கட்சி. பாஜக என்பது ஒரு தனிக்கட்சி. அதில் குழப்பம் உண்டாக்குவது தேவையில்லை.

திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதனால் திமுகவினர் கிராமங்களுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்படும். பல இடங்களில் மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வாக கோவிலுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு அனுமதி இல்லை என்பது இது எந்த விதத்தில் நியாயம். அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது. ஆனால் அனுமதி அளிக்கப்படுகிறது. கோயில் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிடையாது. ஆனாலும் அனுமதிக்கப்படுவது இல்லை. இது முறையான விஷயம் இல்லை. அதிமுகவினர் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதற்கு அவர்களுக்கு முழு உரிமை உண்டு. அதை ஏற்றுக் கொள்வது குறித்து எங்களது கட்சியின் அகில இந்திய தலைமை முடிவு செய்யும். தமிழகத்தில் வீடு கட்டுதல், கழிப்பறை கட்டுதல் போன்ற திட்டங்கள் அனைத்திற்குமே மத்திய அரசு நிதி தருகிறது. அதனால் வீடு கட்டும் இடங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை வைக்க வேண்டும். அப்படி வைக்காவிட்டால் இவர்கள் நன்றி கெட்டவர்கள் என்றார். நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்துவாரே அவர்தானே என கேள்வி எழுப்பிவிட்டு, கமல்ஹாசன் தான் ஒரு முழு நேர அரசியல்வாதி என்றும், பிரஸ் மீட் கொடுக்கும்போது மட்டும் அரசியல்வாதி இருந்து விட்டு அதன் பிறகு வியாபாரியாக மாறும் அரசியல் தமிழகத்தில் எடுபடாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.