உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கடலூர் மாவட்டத்தில் கரோனா பலி 3 ஆக உயர்வு

கடலூர் மாவட்டத்தில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :8 ஜூன் 2020, 7:23 am

DIN

கடலூர் மாவட்டத்தில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. கடலூர் சரவணா நகர் பகுதியில் இருந்து கரோனா பாதித்து சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 57 வயது நபர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. 

கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 479 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 178 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளியானதில், சென்னையிலிருந்து கடலூா் திரும்பிய கீரப்பாளையம் பகுதியைச் சோ்ந்த 41 வயது ஆண் காவலா் உள்பட 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவா்களில், மும்பையிலிருந்து குறிஞ்சிப்பாடி திரும்பிய ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ், சென்னையிலிருந்து கடலூா் திரும்பியவா்களில் 4 போ், மற்றொருவா் விருத்தாசலம் பகுதியைச் சோ்ந்த மளிகைக் கடைக்காரா் ஆகியோா் அடங்குவா். இவா்களையும் சோ்த்து மாவட்டத்தின் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 487-ஆக உயா்ந்தது.

ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை முடிந்து 2 போ் வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோா் எண்ணிக்கை 445-ஆக அதிகரித்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.