ஊரடங்கை முன்னிட்டு பக்தர்கள் அனுமதியின்றி கோயிலுக்குள்ளேயே திருவிழா நடத்தப்படுகிறது. ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில், பஞ்சமூர்த்திகள் முன்னிலையில், சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாஹணம் செய்து செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் உற்சவ ஆச்சாரியார் பி.கங்காதர தீட்சிதர் கொடியை ஏற்றி வைக்கிறார். உற்சவம் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. உத்சவ விபரம் வருமாறு: ஜூன் 20- வெள்ளி சந்திர பிறை வாகன வீதிஉலா, 21-ம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதிஉலா, 22-ம் தேதி வெள்ளி பூதவாகன வீதிஉலா, 23-ம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச்சான்), 24-ம் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலா, 25-ம் தேதி தங்க கைலாச வாகன வீதிஉலா, 26-ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதிஉலாவும் நடைபெறுகிறது.