டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கடலூரில் திருத்தணி மற்றும் ஆந்திர மாநில மரம் வெட்டும் தொழிலாளிகள் போராட்டம்

கடலூரில் திருத்தணி மற்றும் ஆந்திர மாநில மரம் வெட்டும் தொழிலாளிகள் போராட்டத்தில் நடத்தினர். 

News image
Updated On :21 ஜூன் 2020, 1:04 pm

DIN

கடலூரில் திருத்தணி மற்றும் ஆந்திர மாநில மரம் வெட்டும் தொழிலாளிகள் போராட்டத்தில் நடத்தினர். 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் திருவாமூரில் சவுக்கு மரம் வெட்டும் தொழிலில் திருத்தணி மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 19 பேர் தங்களது குழந்தைகளுடன் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் திருத்தணியை சேர்ந்த ஏஜென்ட் மூலமாக குறைந்த பணம் முன்பணமாக கொடுக்கப்பட்டு இங்கு அழைத்து வரப்பட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். 

ஆனால் முறையாக சம்பளம் வழங்காததால் அவர்களுக்கு வழங்கப்படும் சிறு சிறு தொகையையும் சேர்த்து ரூ.1 லட்சம் முதல் ரூ. 1.50 லட்சம் வரையில் செலுத்த வேண்டும் என்று ஏஜென்ட் கூறி மிரட்டி வந்துள்ளார். இதனையடுத்து 19 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீட்கப்பட்டு கடலூர் நகராட்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். 

தற்போது அவர்களை வாகனம் ஏற்பாடு செய்து அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. ஆனால் தாங்கள் கொத்தடிமைகளாக இருந்த நிலையில் மீட்கப்பட்டதாக அறிவித்து கொத்தடிமைகளாக ஈடுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊருக்கு செல்ல மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.