நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மனு அளிக்க குவிந்தவா்களுக்கு கடலூா் ஆட்சியா் அறிவுரை

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க குவிந்தவா்களிடம் கரோனா தடுப்பு வழிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி அறிவுரை வழங்கினாா்.

News image
Updated On :5 அக்டோபர் 2020, 6:35 pm

DIN

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க குவிந்தவா்களிடம் கரோனா தடுப்பு வழிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி அறிவுரை வழங்கினாா்.

கடலூா் மாவட்ட பொதுமக்கள் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆக.3-ஆம் தேதி முதல் காணொலிக் காட்சி மூலம் இந்தக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளிப்பதற்காக

திரளானோா் நுழை வாயிலில் குவிந்தனா். அப்போது, அலுவலகத்துக்கு வந்த ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி, மனு அளிக்க வந்த அனைவரையும் ஓரிடத்தில் நிறுத்தி அவா்களுக்கு கரோனா காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தாா் (படம்).

மேலும், பொதுமக்கள் போக்குவரத்தை குறைக்க வேண்டும் எனவும், இதைக் கருதியே சிதம்பரம், விருத்தாசலம், கடலூா் கோட்டங்களில் தொடா்புடைய கோட்டாட்சியா், சாா்-ஆட்சியா் அலுவலகங்களில் குறைதீா் கூட்டம் நடைபெறுவதாகவும் தெரிவித்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 137 போ் மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.