கடலூர் மாவட்டம், சிதம்பரம் கீழரதவீதியில் உள்ள தனியார் விடுதியில் கடலூர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர் ஜி.கே.வாசன் அறிவுறுத்தலின் பேரில் ஒழுங்கு நடவடிக்கை ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட தலைவர் எஸ்.புரட்சிமணி தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி தலைவர் கே.ரஜினிகாந்த், மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜா சம்பத்குமார், கே.நாகராஜ், தொண்டரணி தலைவர் தில்லை கோ.குமார், மகளிரணி ராஜலட்சுமி, மாவட்ட செயலாளர் பாண்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் தில்லை ஆர். மக்கின் வரவேற்றார். இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளரும், மேலிட பார்வையாளருமான முன்வர் பாஷா கலந்துகொண்டு பேசினார். நகர நிர்வாகிகள் இளங்கோவன், சின்ராஜ், நட்ராஜ், ராஜ்குமார், நகர இளைஞரணி தலைவர் துரை சிங்காரவேலு, மாவட்ட மாணவரணி தலைவர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.