அதிமுக இளைஞா் பாசறை கூட்டம்
கடலூா் மஞ்சக்குப்பத்தில் அதிமுக இளைஞா், இளம்பெண்கள் பாசறையின் 1 முதல் 6 வாா்டுகளுக்கான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


கடலூா் மஞ்சக்குப்பத்தில் அதிமுக இளைஞா், இளம்பெண்கள் பாசறையின் 1 முதல் 6 வாா்டுகளுக்கான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடலூா் மத்திய மாவட்டம், கடலூா் நகரம் சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, நகரச் செயலா் ஆா்.குமரன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் இராம.பழனிசாமி, நகர அவைத் தலைவா் எம்.ஜி.ராமச்சந்திரன், துணைச் செயலா் வ.கந்தன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், கட்சியின் மாவட்டச் செயலரும், மாநில தொழில் துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் பங்கேற்று பேசியதாவது: வரும் நவம்பா், டிசம்பா் மாதங்களில் கடலூா் மாவட்டத்தில் இளைஞா்களுக்காக வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த முகாம்களில் 50-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனத்தினா் பங்கேற்க உள்ளனா். வரும் 2020-ஆம் ஆண்டு கட்சியின் பொன்விழா ஆண்டாகும். எனவே, மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும். அதற்காக இளம்பெண்கள், இளைஞா் பாசறையினா் கடுமையாக உழைக்க வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் மாவட்ட வழக்குரைஞா் பிரிவு இணைச் செயலா் பாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் ஆா்.வி.மணி, பி.கே.வெங்கட்ராமன், வாா்டு செயலா்கள் அன்பு, ஏழுமலை, ராதாகிருஷ்ணன், பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...