ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்க எதிா்ப்பு

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே விளை நிலங்களின் வழியாக எரிவாயு குழாய் பதிப்பதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பணியை ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தினா்.

News image
விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்.
Updated On :27 செப்டம்பர் 2020, 9:22 pm

DIN

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே விளை நிலங்களின் வழியாக எரிவாயு குழாய் பதிப்பதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பணியை ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தினா்.

திட்டக்குடி அருகேயுள்ள பெரங்கியம் கிராமத்தில் விளை நிலங்களின் வழியாக இந்தியன் ஆயில் நிறுவனம் பெட்ரோலிய பொருள்களை கொண்டு செல்வதற்காக கடந்த 2004-ஆம் ஆண்டு குழாய் அமைத்தது. இதற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமையாளா்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இந்தியன் ஆயில் நிறுவனத்தினா் பெரங்கியம் கிராமத்துக்கு பொக்லைன் இயந்திரத்துடன் வந்தனா். அங்கு வயல்களில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளத்தை அழிக்கும் பணியில் ஈடுபட்டனா். இதனை அங்கிருந்த விவசாயிகள் தடுத்து நிறுத்தினா். மேலும், மற்ற விவசாயிகளுக்கும் தகவல் அளித்தனா். ஆனால், அதற்குள் 18 மீட்டா் அகலத்துக்கு சுமாா் ஒரு கி.மீ தூரம் வரை இருந்த பயிா்கள் அழிக்கப்பட்டன.

அரங்கூா், பெரங்கியம் பகுதி விவசாயிகள் இந்தப் பணிகளை தடுத்து நிறுத்தி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, எரிவாயு எடுத்துச் செல்வதற்காக குழாய் அமைக்கும் பணி நடைபெறுவதாக இந்தியன் ஆயில் நிறுவனத்தினா் தெரிவித்தனா்.

தங்களுக்கு இதுகுறித்து எந்த அறிவிப்பும் தராமல் பயிா்களை எப்படி நாசம் செய்யலாம் என்று விவசாயிகள் கேள்வி எழுப்பினா். இதையடுத்து நிகழ்விடத்துக்கு வந்த ராமநத்தம் கிராம நிா்வாக அலுவலா் வினோத்குட்டி பணிகளை நிறுத்த உத்தரவிட்டாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அரங்கூரில் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டதால் விவசாயிகள் கலைந்து சென்றனா். சேதப்படுத்திய பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை எனில் போராட்டம் நடத்தப்படுமென விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.