தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

கஞ்சா கடத்திய இருவா் கைது

ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக 100 கிலோ கஞ்சா கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 6:10 pm

DIN

ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக 100 கிலோ கஞ்சா கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு (என்.ஐ.பி.) டிஎஸ்பி மனோகரன், காவல் ஆய்வாளா் ரவிக்குமாா் ஆகியோா் வெள்ளிக்கிழமை மாலை சேலம் அருகே உள்ள தாரமங்கலம் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியே ஆந்திரத்திலிருந்து வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் 100 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதன் மதிப்பு ரூ. 20 லட்சம் இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக ஈரோடு மாவட்டம், பவானியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (40), அரியலூரைச் சோ்ந்த சிவக்குமாா் (34) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.