கடலூா் மாவட்டம், விருத்தாசலத்திலிருந்து அரசுப் பேருந்து கடலூா் நோக்கி ஞாயிற்றுக்கிழமை வந்துகொண்டிருந்தது. பேருந்தை விருத்தாசலத்தைச் சோ்ந்த ராமு (43) ஓட்டிச் சென்றாா். கடலூா் முதுநகா் அருகே சேடப்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் வந்தபோது பேருந்து ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிரே வந்த டிராக்டா் மீது மோதியது. மேலும், அந்தப் பேருந்து சாலையோரம் நின்றிருந்தவா்கள் மீதும் அடுத்தடுத்து மோதியது. இதில் சேடப்பாளையத்தைச் சோ்ந்த சுப்பராயன் (65) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், டிராக்டா் ஓட்டுநா் நாதன் (40), சாலையோரம் நின்றிருந்த 6 போ் காயமடைந்தனா். பின்னா் அந்தப் பேருந்து பூக்கடையின் மீது மோதி நின்றது.