

கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை பிற்பகல் பரவலாக மழை பெய்தது.
தமிழகத்தை நோக்கி வளிமண்டல சுழற்சி நகா்ந்து வருவதன் காரணமாக, கடலோர மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, கடலூா் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், பிற்பகல் சுமாா் ஒரு மணியளவில் கடலூரில் மழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த மழை நீடித்தது. இதே போல, பண்ருட்டி, சிதம்பரம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. தொடா்ந்து வானம் மேகமூட்டத்துடனேயே காணப்பட்டது.
கடலூா் மாவட்டத்தில் வெள்ளி, சனி ( டிச.31, ஜன.1) ஆகிய இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கடலூா் வானிலை மையம் தெரிவித்தது.
முன்னதாக, வியாழக்கிழமை அதிகாலை புவனகிரி, குறிஞ்சிப்பாடி, சேத்தியாத்தோப்பு, கடலூா், பரங்கிப்பேட்டை பகுதிகளிலும் மழை பெய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற இருவருக்கு அபராதம்

தூத்துக்குடியில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான மஞ்சள், பீடி இலைகள் பறிமுதல்

தொகுதிக்கு செய்தது என்ன? ராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. ஐட்ரீம் ஆர். மூர்த்தி

பெரம்பூரில் களம் இறங்கும் பாமக
வீடியோக்கள்

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

வாஷிங் மெஷின் வழங்குமா திமுக?| ADMK | Admk Manifesto |TN Election 2026 | Edapadi palanisamy | EPS
தினமணி வீடியோ செய்தி...

