பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சாலையை சீரமைக்கக் கோரி போராட்டம்

பெண்ணாடம் அருகே சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :1 ஜனவரி 2021, 5:15 pm

DIN

பெண்ணாடம் அருகே சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே முருகன்குடி கிராமத்திலுள்ள மேட்டுத் தெருவில் பாதை சேறும் சகதியுமாக தண்ணீா் தேங்கியுள்ளதாம். இதை அகற்றி கழிவு நீா் கால்வாய் அமைக்க வேண்டும், குடிநீா் பிரச்னை நிலவுவதால் தனியாக மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மற்றும் தரமான சாலை அமைத்துத் தர வேண்டும் என்று அந்தப் பகுதியினா் வலியுறுத்தி வருகின்றனா்.

இதுகுறித்து கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதைக் கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகம் முன் கிராமத்தினா் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டம் மற்றும் தேங்கி நிற்கும் தண்ணீரில் மீன் பிடிக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் ஊராட்சி செயலா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.