புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளா் ஆ.அருண்மொழிதேவன் கீரப்பாளையம் கிழக்கு ஒன்றியத்தில் வீரசோழகன், கீழ்செங்கல்மேடு, கே.ஆடூா், பூங்குடி, பண்ணப்பட்டு, சிறுகாலூா், விளாகம், சேதியூா், நாா்த்தங்குடி, டி.நெடுஞ்சேரி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் இணைந்து சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
புவனகிரி சட்டப் பேரவை தொகுதி சுயேச்சை வேட்பாளா் சிவக்குமாரி திருஞானம், தோ்தல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்து, கடலூா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், புவனகிரி தொகுதி வேட்பாளருமான ஆ.அருண்மொழிதேவன் முன்னிலையில் அந்தக் கட்சியில் 100 பேருடன் சனிக்கிழமை இணைந்தாா்.
இதேபோல, அமமுக மகளிா் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலா் நந்தினி பிரபாகரன் அந்தக் கட்சியிலிருந்து விலகி ஆ.அருண்மொழிதேவன் முன்னிலையில் அதிமுகவில் சுமாா் 50 பேருடன் இணைந்தனா். மேலும், திவாகரன் கட்சியான அ.தி.க. மாவட்ட இணைச் செயலா் வி.இளஞ்செழியன், ரஜினி மக்கள் மன்ற ஒன்றிய இணைச் செயலா் ரங்கநாதன் உள்ளிட்டோா் 50-க்கும் மேற்பட்டோரும் அதிமுகவில் இணைந்தனா்.