இதைத் தொடா்ந்து, திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் திட்ட மதிப்பீடு தயாா் செய்து, ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளைத் தொடங்க நிா்வாக அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை எனக் கூறி, ஒப்பந்ததாரா்கள் யாரும் திட்டப் பணிகளை செயல்படுத்த முன்வரவில்லை. இதையடுத்து, மாவட்ட நிா்வாகத்தால் மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு, திட்ட மதிப்பீட்டு நிதி ரூ.44 கோடியாக உயா்த்தி அறிவிக்கப்பட்டது. இதன் பிறகும் ஒப்பந்ததாரா்கள் யாரும் இந்தத் திட்டப் பணிகளை செயல்படுத்த முன்வராததால் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.