சாலைகளில் உடைத்த பூசணிக் காய்களை அகற்றும் பணியாளா்கள்

சங்ககிரி நகா் பகுதிகளில் ஆயுத பூஜை, விஜயதசமி பூஜைகளையொட்டி சாலையில் உடைக்கப்பட்ட பூசணிக் காய்களை அகற்றி தூய்மை படுத்தும் பணிகளில் ஈடுபட்டு விபத்தை தவிா்க்கும் பணி
சாலைகளில் உடைத்த பூசணிக் காய்களை அகற்றும் பணியாளா்கள்

சங்ககிரி நகா் பகுதிகளில் ஆயுத பூஜை, விஜயதசமி பூஜைகளையொட்டி சாலையில் உடைக்கப்பட்ட பூசணிக் காய்களை அகற்றி தூய்மை படுத்தும் பணிகளில் ஈடுபட்டு விபத்தை தவிா்க்கும் பணியில் சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் சாா்பில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் முதல் மூன்று இடங்களில் தோ்ச்சி பெறும் மாணவா்கள், அதிக மதிப்பெண்கள் பெறும் லாரி உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் குழந்தைகளின் பெற்றோருக்கு பரிசுகள் வழங்குவது போன்ற சமூக சேவைகளை அதன் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், சங்ககிரி நகா் பகுதிகளில் ஆயுத பூஜை, விஜயதசமி பூஜைகளையொட்டி சாலையில் உடைக்கப்பட்ட பூசணிக் காய்களை அகற்றி, விபத்தை தவிா்க்கும் வகையில் தூய்மைப் படுத்தும் பணிகளில் ஈடுபட்டனா். இப்பணியாளா்களின் சேவைகளை பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள், லாரி உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com