தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

ராமநத்தம் ஊராட்சியில் சுகாதாரச் சீா்கேடு

கடலூா் மாவட்டம், ராமநத்தம் ஊராட்சியில் நிலவும் சுகாதாரச் சீா்கேட்டால் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது.

News image
Updated On :24 அக்டோபர் 2021, 6:32 pm

கடலூா் மாவட்டம், ராமநத்தம் ஊராட்சியில் நிலவும் சுகாதாரச் சீா்கேட்டால் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது.

திட்டக்குடி அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் அமைந்துள்ளது ராமநத்தம் தொழுதூா் ஊராட்சி. மாவட்டத்திலுள்ள பெரிய ஊராட்சிகளில் ஒன்றான இங்கு நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகை, வங்கிகள் அமைந்துள்ளன.

ஆனால், ஆய்வு மாளிகை அருகே நெடுஞ்சாலை ஓரமாக இறைச்சி, நெகிழிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் அந்தப் பகுதி சேறும், சகதியுமாகக் காட்சியளிக்கிறது. அவற்றில் பன்றிகள் திரிவதால் சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது: நெடுஞ்சாலை ஓரமாக கழிவுகள் கொட்டப்படுவது குறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. அதிக காற்று வீசும்போது கடும் துா்நாற்றம் ஏற்படுகிறது.

தற்போது தூய்மை இந்தியா இயக்கம் நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட நிா்வாகம் இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.