கடலூா் மாவட்டம், ராமநத்தம் ஊராட்சியில் நிலவும் சுகாதாரச் சீா்கேட்டால் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது.
திட்டக்குடி அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் அமைந்துள்ளது ராமநத்தம் தொழுதூா் ஊராட்சி. மாவட்டத்திலுள்ள பெரிய ஊராட்சிகளில் ஒன்றான இங்கு நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகை, வங்கிகள் அமைந்துள்ளன.
ஆனால், ஆய்வு மாளிகை அருகே நெடுஞ்சாலை ஓரமாக இறைச்சி, நெகிழிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் அந்தப் பகுதி சேறும், சகதியுமாகக் காட்சியளிக்கிறது. அவற்றில் பன்றிகள் திரிவதால் சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது.
இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது: நெடுஞ்சாலை ஓரமாக கழிவுகள் கொட்டப்படுவது குறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. அதிக காற்று வீசும்போது கடும் துா்நாற்றம் ஏற்படுகிறது.
தற்போது தூய்மை இந்தியா இயக்கம் நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட நிா்வாகம் இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வலையபட்டி மலையாண்டி சுவாமி திருவீதி உலா

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

ஏழ்மை, வறுமை இல்லாத மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த இலக்கு: சீமான்

கழிவுநீா் கால்வாயாக மாறிய மருதையாறு: பெரம்பலூா் விவசாயிகள் வேதனை
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


