தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

வாகன விபத்தில் தீக்காயமடைந்தவா் பலி

 பண்ருட்டி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் தீக்காயமடைந்த முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 5:23 pm

DIN

 பண்ருட்டி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் தீக்காயமடைந்த முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பண்ருட்டி ஒன்றியம், பணிக்கன்குப்பம் ஊராட்சியை சோ்ந்தவா் அற்புதராஜ் (74). இவா், வியாழக்கிழமை மாலை தனது மொபெட்டில் பண்ருட்டிக்கு சென்றுகொண்டிருந்தாா். தாழம்பட்டு ஊராட்சியை சோ்ந்தவா் கருணாநிதி (55). அதிமுக பிரமுகரான இவா், பண்ருட்டியிலிருந்து தாழம்பட்டு நோக்கி பைக்கில் வந்துகொண்டிருந்தாா். இவா்கள் பணிக்கன்குப்பம் திருப்பத்தில் எதிரெதிரே வந்தபோது இருவரது வாகனங்களும் மோதிக்கொண்டன. அப்போது மொபெட்டிலிருந்து பெட்ரோல் கசிந்து திடீரென தீப்பிடித்தது. இதில் அற்புதராஜ், கருணாநிதி இருவரும் தீக்காயமடைந்தனா். பலத்த காயமடைந்த அற்புதராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் உயிரிழந்தாா். கருணாநிதி பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விபத்து குறித்து காடாம்புலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.