எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு பேரணி

கீரப்பாளையத்தில் கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 5:22 pm

கீரப்பாளையத்தில் கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப். 12) கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்துவது தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், ஒன்றிய குழுத் தலைவா் கனிமொழி, உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிா் சுயஉதவிக் குழுவினா், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இருந்து

கரோனா தடுப்பூசி விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் தொடக்கிவைத்தாா்.

பின்னா் ஆட்சியா் பேசுகையில், கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற அலுவலகங்கள், கிராம சேவை மைய கட்டடம், ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட 42 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.