ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சிதம்பரத்தில் பெண்ணிடம் நூதன முறையில் ரூ. ஒரு லட்சம் திருட்டு

சிதம்பரத்தில் வங்கியில் பணம் எடுத்து வந்த பெண்ணிடம், நூதன முறையில் மர்மநபர் ஒருவர் ரூ. ஒரு லட்சம் தொகையை பறித்துச் சென்றார்.

News image
பணத்தை பறிக் கொடுத்த பெண் கலாராணி.
Updated On :24 ஆகஸ்ட் 2022, 7:01 am

DIN

சிதம்பரம்: சிதம்பரத்தில் வங்கியில் பணம் எடுத்து வந்த பெண்ணிடம், நூதன முறையில் மர்மநபர் ஒருவர் ரூ. ஒரு லட்சம் தொகையை பறித்துச் சென்றார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பொன்னம்பல நகரைச் சேர்ந்த சண்முகம். இவரது மனைவி கலாராணி (51). இவர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில்  புதன்கிழமை காலை 10.30 மணிக்கு சென்று வடக்குவீதியில் உள்ள கனரா வங்கியில் நகைகளை அடகு வைத்து ரூ.1.10 ஆயிரம் பெற்று மேலவீதியில் உள்ள மளிகை கடைக்கு சென்றுள்ளனர். 

பணத்தை செலவுக்கு ரூ.10 ஆயிரத்தை கையில் வைத்துக் கொண்டு மீதி ரூ.ஒரு லட்சத்தை இருசக்கர வாகனத்தின் பெட்டியில் வைத்த போது மர்மநபர்கள் இருவர் சில ரூபாய் நோட்டுகளை கீழே  போட்டு அவர்களது கவனத்தை திசை திருப்பிவிட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் ரூ.ஒரு லட்சம் பணத்தை பறித்து சென்றனர்.

இது குறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் கலாராணி புகார் அளித்தார். புகாரின் பேரில் நகர காவல் உதவி ஆய்வாளர் நாகராஜ் சம்பவ இடத்திற்கு விசாரணை மேற்கொண்டு மர்மநபர்களை தேடி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.