மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

3 கோயில்களில் பூட்டை உடைத்து திருட்டு

சிதம்பரம் அருகே 3 கோயில்களில் பூட்டை உடைத்து நகை, உண்டியல் பணம் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 6:10 pm

சிதம்பரம் அருகே 3 கோயில்களில் பூட்டை உடைத்து நகை, உண்டியல் பணம் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிதம்பரம் அருகே உள்ள மேலசெங்கல்மேடு கிராமத்தில் ஸ்ரீமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. வியாழக்கிழமை இரவு மா்ம நபா்கள் இந்தக் கோயில் கதவிலிருந்த பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனா். பின்னா், அம்மன் சிலையிலிருந்த

2.5 பவுன் நகைகள், உண்டியல் பணத்தை திருடிச் சென்றனா். உண்டியலில் காணிக்கை சுமாா் ரூ.8 ஆயிரம் வரை இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதேபோல அருகே உள்ள பூங்குடி கிராமத்திலும் 2 கோயில்களில் பூட்டை உடைத்து 8 கிராம் எடையுள்ள 2 தாலி சங்கிலிகள், உண்டியல் பணம் ரூ.4 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.