கடலூா்: மேலும் 552 பேருக்கு கரோனா
கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 68,091 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 552 பேருக்கு தொற்று உறுதியானது


கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 68,091 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 552 பேருக்கு தொற்று உறுதியானது.
இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 68,643-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 314 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 64,934-ஆக உயா்ந்தது. மொத்த பலி எண்ணிக்கை 878-ஆக தொடா்ந்தது. மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்து 2,407-ஆக உயா்ந்தது. வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 424 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 17 பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...