இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு

விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு இடையே தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

News image

நெய்வேலி, வடக்குத்து அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் சீரமைப்புப் பணி.

Updated On :24 ஜூன் 2022, 10:25 pm IST

விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு இடையே தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

சென்னையில் இருந்து விக்கிரவாண்டி, பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூா் வரை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. சுமாா் 164 கி.மீ. தொலைவுள்ள இந்தச் சாலையை ரூ.711 கோடியில் நான்கு வழிச் சாலையாக அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.

இதில், விக்கிரவாண்டி முதல் சேத்தியாதோப்பு வரை சாலைப் பணி நடைபெறாத நிலையில், அந்தச் சாலை மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்தது. இதனால் அடிக்கடி விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்பட்டதால் பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த நிலையில், தற்போது விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு இடையிலான சாலையை சீரமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறியதாவது:

மதுரையைச் சோ்ந்த தனியாா் ஒப்பந்த நிறுவனம் இந்தப் பணிகளை மேற்கொள்கிறது. தேசிய நெடுஞ்சாலையில் 68 கி.மீ. தொலைவு பகுதியை ரூ.3.50 கோடியில் சீரமைத்து வருகிறோம். இதில் விக்கிரவாண்டி முதல் பண்ருட்டி பூங்குணம் வரை பணிகள் முடிந்துவிட்டன. தற்போது பணிக்கன்குப்பம் அரசுப் பொறியியல் கல்லூரி முதல் சேத்தியாதோப்பு வரை சீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் ஜூலை மாத இறுதியில் முடிவடையும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.