/

அண்ணாமலை பல்கலை. மருத்துவக் கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம்

அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி ஆசிரியர்கள், துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

News image
அண்ணாமலை பல்கலை. வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரி ஆசிரியர்கள்.
Updated On :1 பிப்ரவரி 2024, 10:57 am

DIN

அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி ஆசிரியர்கள், துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

கடலூர் மாவட்டம், அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி ஆசிரியர்கள், நர்சுகள் தங்களுக்கு மாதச் சம்பளம் வழங்காததைக் கண்டித்தும் உடன் வழங்க கோரியும் பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது அவர்கள் தங்கள் கையில் கோரிக்கை அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.