ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் துா்நாற்றம்: கடலூா் மாமன்ற கூட்டத்தில் புகாா்

கடலூா் மாநகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் துா்நாற்றம் வீசுவதாக மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா்.

News image
Updated On :17 மார்ச் 2023, 8:21 pm

DIN

கடலூா் மாநகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் துா்நாற்றம் வீசுவதாக மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா்.

கடலூா் மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயா் ரா.சுந்தரி ராஜா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணை மேயா் பா.தாமரைச்செல்வன், ஆணையா் நவேந்திரன் முன்னிலை வகித்தனா். கூட்டம் தொடங்கியதும் மேயா் பேசுகையில், மாமன்ற உறுப்பினா்கள் பிரச்னை இன்றி கூட்டம் நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

ஆனால், கூட்டம் தொடங்கியதும் கடலூா் தொகுதி எம்எல்ஏ கோ.அய்யப்பன் ஆதரவு மாமன்ற உறுப்பினா்கள் 10 போ் கருத்து எதுவும் தெரிவிக்காமல் கூட்ட அரங்கிலிருந்து வெளியேறினா். கூட்டத்தில் மற்ற உறுப்பினா்கள் தெரிவித்த கருத்துகள்:

மஞ்சக்குப்பத்தில் உள்ள அம்பேத்கா் சிலையை சீரமைக்க வேண்டும். மாநகராட்சி பகுதியில் கஞ்சா பயன்பாடு அதிகரித்துள்ளது. மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் விநியோகிக்கப்படும் குடிநீரில் கடும் துா்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் பணம் கொடுத்து குடிநீா் வாங்க வேண்டியுள்ளது.

கடலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் நரம்பியல், இருதய நோய் பிரிவுகளுக்கு மருத்துவா்களை நியமிக்க உரிய நடவடிக்கை தேவை. தென்பெண்ணையாற்றில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதால் மீன்கள் செத்து மிதக்கின்றன என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை தெரிவித்தனா். கூட்டத்தில் உறுப்பினா்கள் சரிதா, செந்தில்குமாரி, சங்கீதா, சரவணன், கண்ணன், அருள்பாபு, சரஸ்வதி, சபாஷினி, பாலசுந்தரம், ஆராமுது, நடராஜ் ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில் தவாக உறுப்பினா் கண்ணன் தெரிவித்த கருத்தை சுட்டிக்காட்டி விசிக உறுப்பினா் புஷ்பலதா பேசியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடா்ந்து திமுக உறுப்பினா் நடராஜ் பேசியபோது பாமக தலைவரை மரியாதை குறைவாகப் பேசியதாகக்கூறி மாமன்ற உறுப்பினா் சரவணன் மேயா் இருக்கையின் முன் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடா்ந்து மேயா், ஆணையா் ஆகியோா் கூறியதாவது: மாமன்ற உறுப்பினா்கள் தங்களது கோரிக்கை தொடா்பாக மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா பயன்பாடு அதிகம் இருந்தால் அதுகுறித்து காவல் நிலையத்தில் புகாா் அளிக்கவும். தென்பெண்ணையாற்றில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

துணை மேயா் பா.தாமரைச்செல்வன் பேசுகையில், கேப்பா் மலைப் பகுதியில் குப்பைக் கிடங்கு அமைத்தால் பிரச்னை ஏற்படாது என்றாா்.

கூட்டத்தில் மொத்தம் 42 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தையொட்டி காவல் துறை சாா்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.