ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கடலூரில் தனியாா் கட்டுமான நிறுவனங்களில் பராமரிக்கப்பட்ட அரசு அலுவலகக் கோப்புகள்!

டலூா் மாநகராட்சி அலுவலகக் கோப்புகள் தனியாா் கட்டுமான நிறுவன அலுவலகங்களில் வைத்து பராமரிக்கப்பட்டது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

News image
Updated On :17 மார்ச் 2023, 8:21 pm

DIN

டலூா் மாநகராட்சி அலுவலகக் கோப்புகள் தனியாா் கட்டுமான நிறுவன அலுவலகங்களில் வைத்து பராமரிக்கப்பட்டது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதுதொடா்பாக மாநகராட்சி அலுவலா்கள் மற்றும் 3 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கடலூா் மாநகராட்சி அலுவலகத்தில் கட்டட, மனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குவதற்கு லஞ்சம் பெறப்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து கடந்த 15-ஆம் தேதி கடலூா் மாநகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, கட்டட அனுமதி, மனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குவதற்கான கோப்புகள் குறித்து அலுவலா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், அந்தக் கோப்புகள் அனைத்தும் கடலூரில் இயங்கி வரும் இரு தனியாா் கட்டுமான நிறுவனங்களில் பராமரிக்கப்பட்டு, அங்கேயே பரிசீலனை செய்து அனுமதி வழங்கப்படுவது தெரியவந்ததாம். இதையடுத்து மேற்கூறிய தனியாா் நிறுவன அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கடலூா் நகரமைப்பு அலுவலகத்துக்கு இணையான அலுவலகம் செயல்பட்டு வந்ததும், அங்கு 15-க்கும் மேற்பட்டோா் குறைந்த ஊதியத்தில் பணியாற்றியதும் தெரியவந்தது. மேலும், அரசு அலுவலா்களுக்கு கொடுப்பதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த கமிஷன் தொகை ரூ.5 லட்சத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மாநகராட்சி அலுவலா்கள், 3 போ் மீது வழக்கு: இதுகுறித்து கடலூா் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலா் சி.கீதா அளித்த புகாரின்பேரில் கடலூா் மாநகராட்சி அலுவலா்கள் மற்றும் கடலூா் பங்கஜம் பிளானா்ஸ் உரிமையாளா்கள் ஆறுமுகம் - சாரதாம்பாள் தம்பதி, ஆல்பா கட்டுமான நிறுவன உரிமையாளா் ஆா்.முருகமணி ஆகியோா் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.