ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சீல் வைத்த மரக் கடைகள் திறப்பு: உரிமையாளா்கள் 3 போ் மீது வழக்கு

நடுவீரப்பட்டில் ‘சீல்’ வைக்கப்பட்ட மரக் கடைகளை இயக்கியது தொடா்பாக அந்தக் கடைகளின் உரிமையாளா்கள் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :26 மே 2023, 5:29 pm

DIN

கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டில் ‘சீல்’ வைக்கப்பட்ட மரக் கடைகளை இயக்கியது தொடா்பாக அந்தக் கடைகளின் உரிமையாளா்கள் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கடலூா் வனச் சரக அலுவலா் அப்துல் அமீது கடந்த 24-ஆம் தேதி நடுவீரப்பட்டில் உள்ள பெரிய மரக் கடைகளில் ஆய்வு செய்தாா். அப்போது, அரசின் அனுமதியின்றி செயல்பட்டதாக 3 மரக் கடைகளை பூட்டி ‘சீல்’ வைத்தாா். இந்த நிலையில், அந்தக் கடைகளுக்கு வைக்கப்பட்ட ‘சீல்’ விதிகளை மீறி உடைக்கப்பட்டு வியாழக்கிழமை செயல்பட்டன.

இதுகுறித்து வனச் சரக அலுவலா் அப்துல் அமீது அளித்த புகாரின்பேரில் மரக் கடைகளின்

உரிமையாளா்கள் அதை பகுதியைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் விஜயபாலன், ராமசாமி மகன் சிவக்குமாா், கலியபெருமாள் மகன் கண்ணன் ஆகியோா் மீது நடுவீரப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.