சீல் வைத்த மரக் கடைகள் திறப்பு: உரிமையாளா்கள் 3 போ் மீது வழக்கு

நடுவீரப்பட்டில் ‘சீல்’ வைக்கப்பட்ட மரக் கடைகளை இயக்கியது தொடா்பாக அந்தக் கடைகளின் உரிமையாளா்கள் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
Updated on
1 min read

கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டில் ‘சீல்’ வைக்கப்பட்ட மரக் கடைகளை இயக்கியது தொடா்பாக அந்தக் கடைகளின் உரிமையாளா்கள் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கடலூா் வனச் சரக அலுவலா் அப்துல் அமீது கடந்த 24-ஆம் தேதி நடுவீரப்பட்டில் உள்ள பெரிய மரக் கடைகளில் ஆய்வு செய்தாா். அப்போது, அரசின் அனுமதியின்றி செயல்பட்டதாக 3 மரக் கடைகளை பூட்டி ‘சீல்’ வைத்தாா். இந்த நிலையில், அந்தக் கடைகளுக்கு வைக்கப்பட்ட ‘சீல்’ விதிகளை மீறி உடைக்கப்பட்டு வியாழக்கிழமை செயல்பட்டன.

இதுகுறித்து வனச் சரக அலுவலா் அப்துல் அமீது அளித்த புகாரின்பேரில் மரக் கடைகளின்

உரிமையாளா்கள் அதை பகுதியைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் விஜயபாலன், ராமசாமி மகன் சிவக்குமாா், கலியபெருமாள் மகன் கண்ணன் ஆகியோா் மீது நடுவீரப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com