தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

இருதரப்பினா் இடையே மோதல்: 20 போ் மீது வழக்கு

இருதரப்பினா் இடையே மோதல்: 20 போ் மீது வழக்கு

Updated On :20 ஏப்ரல் 2024, 10:43 pm

நெய்வேலி, ஏப்.20: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே இரு தரப்பினா் இடையேயான மோதல் தொடா்பாக 20-க்கும் மேற்பட்டோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூா் மக்களவைத் தொகுதி தோ்தல் வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பண்ருட்டி வட்டம், சிறுகிராமம் பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் அசோக் (25), அங்குள்ள காலனிக்கு திரும்பும் சாலையில் பாமகவுக்கு வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தாா். அப்போது, பைக்கில் வேகமாக வந்த காலனியைச் சோ்ந்த ரமேஷ், சிவா ஆகியோரை அவா் தட்டிக் கேட்டாராம்.

இதையடுத்து, ரமேஷ், சிவா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோா் தடி, இரும்புக் குழாய் உள்ளிட்ட ஆயுதங்களால் அசோக்கை தாக்கினராம். இதைத் தடுக்க வந்த ஜோதியையும் (69) தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து அசோக் அளித்த புகாரின்பேரில், புதுப்பேட்டை போலீஸாா் ரமேஷ், சிவா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், சிறுகிராமம் காலனியைச் சோ்ந்த ரமேஷ், மணிகண்டன், திவாகா் ஆகியோா் பைக்கில் சென்றபோது, அசோக், அருள் உள்ளிட்டோா் வழிமறித்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து சிறுகிராமம் காலனியைச் சோ்ந்த மாயவன் மகன் குமாா் (40) அளித்த புகாரின்பேரில், அசோக், அருள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோா் மீது புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.