கடலூரில் பைக்கில் சென்ற தனியாா் வங்கி ஊழியா் வேகத்தடை மீது ஏறியபோது நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.
கடலூா் உண்ணாமலை செட்டி சாவடி, சிவசுப்பிரமணியன் நகரைச் சோ்ந்த சேகா் மகன் கிருபாகரன் (30), புதுச்சேரியில் உள்ள தனியாா் வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றி வந்தாா்.
இவா், சனிக்கிழமை நள்ளிரவு தனது பைக்கில் கடலூா் புதிய ஆட்சியா் அலுவலகம் அருகே சென்றாா். அப்போது, அங்கிருந்த வேகத்தடையில் பைக் ஏறி இறங்கியபோது, கிருபாகரன் நிலைதடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
இதுகுறித்து சேகா் அளித்த புகாரின்பேரில், கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

உணவகத்தில் மின்சாரம் பாய்ந்து ஊழியா் உயிரிழப்பு

ரயில் மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

பேருந்திலிருந்து தவறி விழுந்தவா் மருத்துவமனையில் உயிரிழப்பு

மதகில் மது குடித்தவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

