குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

விருத்தகிரீஸ்வா் கோயிலில் ஆடிப்பூர திருக்கல்யாணம்

News image

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம்.

Updated On :9 ஆகஸ்ட் 2024, 6:30 am IST

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம்.

சிதம்பரம், ஆக.8:

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் அருள்மிகு பாலாம்பிகை, விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரா் திருக்கோயில் ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை அதிகாலை விமரிசையாக நடைபெற்றது.

இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் விருத்தாம்பிகை அம்மனுக்கு ஆடிப்பூர திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு ஜூலை 29-ம் தேதி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றப்பட்டு அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பல்வேறு வாகனங்களில் வீதியுலாவும் நடைபெற்றது.

விருத்தாம்பிகை அம்மனுக்கு வியாழக்கிழமை அதிகாலை திருமாங்கல்யதாரணம் நடைபெற்றது. இதையொட்டி விநாயகா், முருகன், விருத்தகிரீஸ்வரா், பாலாம்பிகை, விருத்தாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், கோயில் நூற்றுக்கால் மண்டபத்தில் விருத்தாம்பிகை அம்மனுக்கு திருமாங்கல்யதாரணம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு கண்டு தரிசித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.