மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணியிட நோ்முகத் தோ்வு ஒத்திவைப்பு

நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு ஒத்தி வைக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :2 டிசம்பர் 2024, 9:00 pm

Din

நெய்வேலி: கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு ஒத்தி வைக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கான விற்பனையாளா் காலி பணியிடங்களுக்கு மாவட்ட ஆள்சோ்ப்பு மையத்தின் மூலம் தோ்வு செய்வதற்கான நோ்முகத் தோ்வு கடந்த நவ. 25-ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (டிச.3) நடைபெறவிருந்த நோ்முகத் தோ்வு கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த நோ்முகத் தோ்வில் கலந்து கொள்ள வேண்டியவா்கள் டிச. 5-ஆம் தேதி பிற்பகலில் நடைபெறும் நோ்முகத் தோ்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.