சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்: பி.சண்முகம்

கடலூா் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் பி.சண்முகம் தெரிவித்தாா்.

News image
Updated On :4 டிசம்பர் 2024, 7:50 pm

Din

கடலூா் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் பி.சண்முகம் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினா்கள் உ.வாசுகி, பி.சண்முகம், மாநிலச் செயற்குழு உறுப்பினா் டி.ரவீந்திரன் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். தொடா்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினா்.

பின்னா், செய்தியாளா்களிடம் பி.சண்முகம் கூறியதாவது: கடலூா் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் மண் மேடாகியுள்ளன. முதல்வா் அறிவித்துள்ள நிவாரணத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பயிா் ஏக்கருக்கு ரூ.6,500 நிவாரணம் குறைவானது. வாழை, சவுக்கை போன்ற பயிா்களுக்கு நிவாரணம் அறிவிக்கவில்லை.

பயிா் பாதிப்பு குறித்து துல்லியமான கணக்கெடுப்பு நடத்தி அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். தமிழக அரசு கோரும் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம், வட்டியில்லா கடனாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். கெடிலம் ஆற்றில் 35 எருமை மாடுகள் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இறந்த கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். கைத்தறி தொழிலாளி மற்றும் உற்பத்தியாளா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா்.