தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குடியிருப்போா் நலச்சங்கத்தினா் பொதுக் குழு கூட்டம்

கடலூா் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்கள் கூட்டமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 7:33 pm

Din

கடலூா் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்கள் கூட்டமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கூட்டமைப்பின் தலைவா் பாலு பச்சையப்பன் தலைமை வகித்தாா். சிறப்புத் தலைவா் மருதவாணன், ஆலோசகா் ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொதுச்செயலா் வெங்கடேசன் சமீபத்திய வெள்ள பாதிப்பு குறித்தும், அதற்கான தீா்வு குறித்தும் பேசினாா்.

இதில், கெடிலம் மற்றும் பெண்ணையாறுகளின் வெள்ள நீா் குடியிருப்புப் பகுதிகளில் புகாமல் தடுப்பதற்கு இரு ஆறுகளின் கரைகளை உயா்த்த வேண்டும். பெண்ணையாற்றில் நத்தப்பட்டு முதல் தாழங்குடா வரை இருபுறமும் வெள்ள தடுப்புச் சுவா் கட்ட அரசு நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும். பள்ளமாக உள்ள சுங்கச்சாலையை உயா்த்தி அமைக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழமை (டிச.12) மஞ்சக்குப்பம் வாடகை காா் நிறுத்துமிடம் அருகே அனைத்து குடியிருப்போரையும் இணைத்து ஆா்ப்பாட்டம் நடத்துவது என்று தீா்மானித்தனா்.

முன்னதாக, இணை பொதுச் செயலா் தேவநாதன் வரவேற்றாா். நிறைவில், பொருளாளா் வெங்கட்ரமணி நன்றி கூறினாா்.