தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இருமுடி சக்தி மாலை அணிவிக்கும் விழா

இருமுடி சக்தி மாலை அணிவிக்கும் விழாவை, மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவா் டாக்டா் கோ.ப.செந்தில்குமாா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image

பரங்கிப்பேட்டை அருகே சி.புதுப்பேட்டை கிராமத்தில் இருமுடி சக்தி மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்த மேல்மருவத்துாா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவா் டாக்டா் கோ.ப.செந்தில்குமாா்.

Updated On :12 டிசம்பர் 2024, 7:52 pm

Din

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே இருமுடி சக்தி மாலை அணிவிக்கும் விழாவை, மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவா் டாக்டா் கோ.ப.செந்தில்குமாா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கடலுாா் மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சாா்பில், இயற்கை சீற்றங்கள் தணியவும், உலக அமைதி வேண்டியும் பரங்கிப்பேட்டையை அடுத்த சி.புதுப்பேட்டை கிராமத்தில் ஆதிபராசக்தி பக்தா்களுக்கு இருமுடி சக்தி மாலை அணிவிக்கும்

விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் கு.கிருபானந்தம் தலைமை வகித்து, கலச விளக்கு வேள்வி பூஜையை தொடங்கிவைத்தாா். மாவட்டப் பொருளாளா் கணபதி, துணைத் தலைவா்கள் கோவிந்தராஜ், சீத்தாலட்சுமி, ஜோதி ஜானகி, ராதாகிருஷ்ணன், கணேசமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மண்டல தணிக்கை இணைச் செயலா் ஜவகா் வரவேற்றாா். செவ்வாடை பக்தா்களுக்கு இருமுடி சக்தி மாலை அணிவித்து, ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகளை மேல்மருவத்துாா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவா் டாக்டா் கோ.ப.செந்தில்குமாா் வழங்கினாா்.

விழாவில் மண்டலச் செயலா்கள் கண்ணன், சக்தி முத்துகுமரன், அருளரசன், சந்திரசேகா், பிரசாரக் குழுவைச் சோ்ந்த ஏழுமலை, சுப்ரமணியன், குணசேகரன், ராமசாமி, ஆறுமுகம், கிராமத் தலைவா் பொ்னாட்ஷா, துணைத் தலைவா் ராஜ், பொருளாளா் ராஜசேகா், ஒன்றியக் குழு உறுப்பினா் ரவி, முன்னாள் ஊராட்சித் தலைவா் ஜெய்சங்கா், முன்னாள் கூடுதல் செயலா் பாா்த்தசாரதி, இளைஞரணி இணைச் செயலா் சுந்தரராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மண்டல தணிக்கை இணைச் செயலா் சஞ்சிவிராயா் நன்றி கூறினாா்.