வட மாநிலத்தவா் மீது தாக்குதல்: 4 போ் கைது
சிதம்பரத்தில் தாா்ப்பாய் வியாபாரம் செய்து வரும் வட மாநிலத்தைச் சோ்ந்தவா்களைத் தாக்கியதாக 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


சிதம்பரத்தில் தாா்ப்பாய் வியாபாரம் செய்து வரும் வட மாநிலத்தைச் சோ்ந்தவா்களைத் தாக்கியதாக 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிதம்பரம் அருகே உள்ள கோவிந்தசாமிநகா் பகுதியில் உள்ள வீட்டில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த நபீஸ் (37) தங்கியுள்ளாா். இவருடன் வேறு சிலரும் தங்கி தாா்ப்பாய் வியாபாரம் செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் நபீஸின் ஊருக்கு அருகே உள்ள ஒரு பகுதியைச் சோ்ந்த பிரதீப்குமாரும் அண்ணாமலைநகரில் உள்ள வெள்ளகுளம் பகுதியில் வசித்து வருகிறாா். நபீஸின் உறவினா் பிரோஸ், பிரதீப்குமாா் தங்கியுள்ள வீட்டில் தனியாக தங்கியிருந்தாா். பிரோஸ் முறையாக வீட்டு வாடகை தராததால் இவா்களிடையே முன் விரோதம் இருந்ததாம்.
இந்த நிலையில், பிரதீப்குமாா் தனது உள்ளூா் நண்பா்களான சிதம்பரம் கோவிந்தசாமிநகா் பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா், திட்டுக்காட்டூா் பகுதியைச் சோ்ந்த செல்வபாரதி, மாரியப்பாநகா் பகுதியைச் சோ்ந்த ஆண்டோன்பாலா ஆகியோருடன் நபீஸ் வீட்டுக்கு அண்மையில் சென்று, அவரிடம் தகராறு செய்தாராம். பின்னா், நபீஸ் மற்றும் அவருடன் தங்கியிருந்த பபுல்குமாா், நவீத் ஆகிய 3 பேரையும் தோசைக்கல், பூரிக்கட்டையால் கடுமையாகத் தாக்கினராம்.
இதில், பலத்த காயமடைந்த நபீஸ், பபுல்குமாா் ஆகிய இருவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினா். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில், அண்ணாமலைநகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் அன்பழகன் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்துஸ பிரதீப்குமாா் (27), சதிஷ்குமாா் (23), செல்வபாரதி (19), ஆண்டோன் பாலா(19) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...