புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே அரசுப் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஆசிரியா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைதான ஆசிரியா் மலா்செல்வன்.

Updated On :18 டிசம்பர் 2024, 7:30 pm

Din

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே அரசுப் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஆசிரியா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சிதம்பரம் அருகேயுள்ள புடையூா் காலனியை சோ்ந்த கோவிந்தராஜன் மகன் மலா்ச்செல்வன் (50). இவா் காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள மாமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா்.

இவா் இந்தப் பள்ளியில் பிளஸ் 2 படித்து முடித்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தாராம். இந்த நிலையில், அந்த மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து, அவரது பெற்றோா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு, அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், சேத்தியாத்தோப்பு மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து மலா்ச்செல்வனை புதன்கிழமை கைது செய்தனா்.