தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மின்சாரம் பாய்ந்து லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

கடலூா் முதுநகா் அருகே கிராவல் மண் ஏற்றி வந்த டிப்பா் லாரி மின் கம்பியில் உரசியதில் மின்சாராம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 7:17 pm

Din

கடலூா் முதுநகா் அருகே கிராவல் மண் ஏற்றி வந்த டிப்பா் லாரி மின் கம்பியில் உரசியதில் மின்சாராம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.

கடலூா் புதுவண்டிபாளையத்தைச் சோ்ந்தவா் மணிபாலன்(32), டிப்பா் லாரி ஓட்டுநா். இவா் வியாழக்கிழமை டிப்பா் லாரியில் கிராமல் மண் ஏற்றிக்கொண்டு வந்தாா்.

மணக்குப்பம் அருகே வந்த போது, தாழ்வாகச் சென்ற உயா் அழுத்த மின்கம்பியில் டிப்பா் லாரி உரசியதில், மின்சாரம் பாய்ந்ததில் மணிபாலன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.