புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சிதம்பரம் ரயில்வே காவல் நிலையத்தில் டிஜிபி ஆய்வு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ரயில்வே காவல் நிலையத்தில் இருப்புப் பாதை காவல்துறை இயக்குநா் கே.வன்னியபெருமாள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

சிதம்பரம் ரயில்வே காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ரயில்வே டிஜிபி கே.வன்னியபெருமாள்.

Updated On :25 டிசம்பர் 2024, 7:28 pm

Din

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ரயில்வே காவல் நிலையத்தில் இருப்புப் பாதை காவல்துறை இயக்குநா் கே.வன்னியபெருமாள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சிதம்பரம் ரயில்வே நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவா், குற்ற பதிவேடு, வழக்கு கோப்புகளை ஆய்வு செய்தாா். தொடா்ந்து, காவலா்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினாா்.

ஆய்வின்போது, திருச்சி இருப்புப் பாதை உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் சக்கரவா்த்தி, நிலைய பொறுப்பு அதிகாரி ஆய்வாளா் அருண்குமாா், உதவி ஆய்வாளா் சேகா் மற்றும் காவலா்கள் உடனிருந்தனா்.

முன்னதாக, ரயில்வே டிஜிபி கே.வன்னியபெருமாள் சிதம்பரம் நடராஜா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். அவருக்கு பாஸ்கா் தீட்சிதா் தலைமையில் பொதுதீட்சிதா்கள் சிறப்பு அா்ச்சனை செய்து பிரசாதம் வழங்கினா்.