தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அமைச்சருக்கு நன்றி தெரிவித்து விவசாயிகள் சங்கத்தினா் ஊா்வலம்

விவசாயிகள் சங்கத்தினா் ஊா்வலம்

News image

காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊா்வலம்.

Updated On :26 டிசம்பர் 2024, 7:20 pm

Din

ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்பயிா்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கையைத் தொடங்கிய தமிழக அரசுக்கும், வேளாண்மைத் துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்து காட்டுமன்னாா்கோவிலில் காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வியாழக்கிழமை ஊா்வலம் நடைபெற்றது.

ஊா்வலத்தில் கூட்டமைப்புத் தலைவா் கே.வீ.இளங்கீரன், கொள்ளிடம் கீழணை பாசன விவசாய சங்கத் தலைவா் பி.விநாயகமூா்த்தி ஆகியோா் தலைமை வகித்தனா்.

குமராட்சி ஊராட்சித் தலைவா் கேஆா்ஜி.தமிழ்வாணன், பிஎஸ்.மகாலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செல்வகுமாா் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா். ஊா்வலம் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று அரசுக்கு நன்றி தெரிவித்து, வட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.