தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

19 இடங்களில் இன்று அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் மறியல்

19 இடங்களில் இன்று அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் மறியல் ........................................ கு.பாலசுப்ரமணியன்

Updated On :18 பிப்ரவரி 2024, 2:04 am IST

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை விலியுறுத்தி, தமிழகத்தில் 19 மையத் தலைநகரங்களில் தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக அந்தச் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா். இதுகுறித்து கடலூரில் அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பல மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்துள்ளன. தமிழக முதல்வா் தோ்தல் அறிக்கையில் தெரிவித்தபடி பழைய ஓய்வூத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்து சங்கங்களும் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதுவரை அந்த அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே, முதல்வா் சங்கங்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் நோக்கத்தோடு, சென்னையைத் தவிர மாநிலம் முழுவதும் 19 மையங்களில் எங்களது 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது என்று தெரிவித்தாா். அரசுப் பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் இருதயராஜ், முன்னாள் மாவட்டச் செயலா்கள் ராஜாமணி, விவேகானந்தன் உடன் இருந்தனா்.