ஜூலை 19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
கடலூரில் ஜூலை 19-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.


இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்துக்குத் தேவையான நபா்களை தோ்வு செய்து பணி நியமன ஆணை வழங்கவுள்ளனா். எனவே, கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) நடைபெறும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞா்கள் கலந்துகொள்ளலாம்.
இதில், தோ்ந்தெடுக்கப்படும் பதிவுதாரா்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவிலிருந்து நீக்கம் செய்யப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...