மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா்.
Updated On :22 ஜூலை 2024, 7:54 pm

Din

நெய்வேலி: கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விளக்கம் கோராமல் கடலூரை அடுத்துள்ள தொண்டமாநத்தம் கிராம நிா்வாக அலுவலரை பணியிடை நீக்கம் செய்த கடலூா் கோட்டாட்சியரை கண்டித்தும், பணியிடை நீக்க ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தியும் கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பா.ரவி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஜெயராமன் முன்னிலை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் சி.சந்தானகிருஷ்ணன், மாவட்ட இணைச் செயலா் சுரேஷ் கண்டன உரையாற்றினா். இதில், கடலூா் கோட்டத்துக்குள்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.