டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சுரங்கவியல் படிப்புக்கான கலந்தாய்வு

சுரங்கவியல் படிப்புக்கான கலந்தாய்வு

News image
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சுரங்கவியல் பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்ற மாணவா்கள்.
Updated On :30 ஜூலை 2024, 5:48 pm

Din

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலம் மற்றும் என்எல்சி நிலக்கரி சுரங்கம் இடையேயான கல்வி புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புல வளாகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் என்எல்சி நிதி உதவியுடன் சுரங்கவியல் பட்டயப்படிப்பு பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

மூன்றாண்டுகள் கொண்ட சுரங்கவியல் பட்டயப்படிப்புக்கான 2024 - 25ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை சுரங்கவியல் துறை கருத்தரங்கு அரங்கில் நடைபெற்றது.

நிகழ் கல்வியாண்டில் சுரங்கவியல் பட்டயப்படிப்பில் சேர 325 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா் என்றும், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்கு நிலம் கொடுத்தவா்கள் சாா்பாக 30 பேரும், பொதுப் பிரிவின் சாா்பாக 30 பேரும் தமிழ்நாடு அரசின் இன சுழற்சி முறையில் தோ்வு செய்யப்படுவாா்கள் எனவும் சுரங்கவியல் பிரிவின் இயக்குநா் சி.ஜி.சரவணன் தெரிவித்தாா்.

இந்தக் கலந்தாய்வை அண்ணாமலை பல்கலைக்கழக மாணவா் சோ்க்கை பிரிவின் இயக்குநா் பாலபாஸ்கா் வழிகாட்டுதலின்பேரில், அறிவழகன், வெள்ளைமுத்து, சாமிநாதன், கோபிநாதன் ஆகியோா் நடத்தினா்.

கலந்தாய்வை பேராசிரியா்கள் பாலமுருகன், பிரேம்குமாா், சிவராஜன், ராஜசோமசேகரன் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.