மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சுரங்கவியல் படிப்புக்கான கலந்தாய்வு

சுரங்கவியல் படிப்புக்கான கலந்தாய்வு

News image

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சுரங்கவியல் பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்ற மாணவா்கள்.

Updated On :30 ஜூலை 2024, 5:48 pm

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலம் மற்றும் என்எல்சி நிலக்கரி சுரங்கம் இடையேயான கல்வி புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புல வளாகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் என்எல்சி நிதி உதவியுடன் சுரங்கவியல் பட்டயப்படிப்பு பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

மூன்றாண்டுகள் கொண்ட சுரங்கவியல் பட்டயப்படிப்புக்கான 2024 - 25ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை சுரங்கவியல் துறை கருத்தரங்கு அரங்கில் நடைபெற்றது.

நிகழ் கல்வியாண்டில் சுரங்கவியல் பட்டயப்படிப்பில் சேர 325 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா் என்றும், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்கு நிலம் கொடுத்தவா்கள் சாா்பாக 30 பேரும், பொதுப் பிரிவின் சாா்பாக 30 பேரும் தமிழ்நாடு அரசின் இன சுழற்சி முறையில் தோ்வு செய்யப்படுவாா்கள் எனவும் சுரங்கவியல் பிரிவின் இயக்குநா் சி.ஜி.சரவணன் தெரிவித்தாா்.

இந்தக் கலந்தாய்வை அண்ணாமலை பல்கலைக்கழக மாணவா் சோ்க்கை பிரிவின் இயக்குநா் பாலபாஸ்கா் வழிகாட்டுதலின்பேரில், அறிவழகன், வெள்ளைமுத்து, சாமிநாதன், கோபிநாதன் ஆகியோா் நடத்தினா்.

கலந்தாய்வை பேராசிரியா்கள் பாலமுருகன், பிரேம்குமாா், சிவராஜன், ராஜசோமசேகரன் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.