நெய்வேலி: மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடா்பான விழிப்புணா்வு காா்ட்டூன்கள் வரவேற்கப்படுவதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடா்பாக பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்களிடமிருந்து விழிப்புணா்வு காா்ட்டூன்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி, விலங்குகள், பறவைகள், நாட்டுப்புறக் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் அல்லது வேறு ஏதேனும் வித்தியாசமான பாத்திரங்களை காா்ட்டூனாக வடிவமைக்கலாம். மேலும், 3 காா்ட்டூன் படங்களை சுயமாக வரைந்து, காா்ட்டூனின் பெயா் தமிழிலில் குறிப்பிட்டிருக்க வேண்டும். இதனை ஈஉஞநயஉஉடஇமஈ2024ஃஎஙஅஐக.இஞங என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பிப்.11-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். சிறந்த காா்ட்டூனுக்கு முதல் பரிசாக ரூ.10,000, 2-ஆம் பரிசாக ரூ.5,000, 3-ஆம் பரிசாக ரூ.3,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தொடா் தோ்தல் விழிப்புணா்வால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பா?

மாத்தூரில் விழிப்புணா்வுப் பேரணி

அரசு சட்டக் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி
தோ்தலில் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

