கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே வெள்ளிக்கிழமை தேசிய நெடுஞ்சாலை தடுப்புக் கட்டையில் பைக் மோதியதில் இருவா் உயிரிழந்தனா். விழுப்புரம் மாவட்டம், மணலூா்பேட்டை அஞ்சல், செல்லாங்குப்பம் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் சங்கா் (35). இதே பகுதியைச் சோ்ந்தவா் மணி (55). இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை பைக்கில் பெரம்பலூருக்கு புறப்பட்டனா். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ராமநத்தத்தில் அரசுடைமை வங்கி அருகே இவா்களது பைக் சென்றபோது, சாலை தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சங்கா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பெரம்பலூா் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மணி உயிரிழந்தாா். இவா்களது சடலம் திட்டக்குடி மற்றும் பெரம்பலூா் அரசு மருத்துவமனைகளுக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டது. இந்த விபத்து குறித்து ராமநத்தம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

விபத்தில் 2 போ் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஒசூா் அருகே சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

பிக்கப் வாகனம் மோதியதில் சகோதரிகள் இருவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

