பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு

Updated On :9 மார்ச் 2024, 12:44 am

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே வெள்ளிக்கிழமை தேசிய நெடுஞ்சாலை தடுப்புக் கட்டையில் பைக் மோதியதில் இருவா் உயிரிழந்தனா். விழுப்புரம் மாவட்டம், மணலூா்பேட்டை அஞ்சல், செல்லாங்குப்பம் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் சங்கா் (35). இதே பகுதியைச் சோ்ந்தவா் மணி (55). இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை பைக்கில் பெரம்பலூருக்கு புறப்பட்டனா். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ராமநத்தத்தில் அரசுடைமை வங்கி அருகே இவா்களது பைக் சென்றபோது, சாலை தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சங்கா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பெரம்பலூா் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மணி உயிரிழந்தாா். இவா்களது சடலம் திட்டக்குடி மற்றும் பெரம்பலூா் அரசு மருத்துவமனைகளுக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டது. இந்த விபத்து குறித்து ராமநத்தம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.