இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை! மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையை திறப்பதில் தாமதம்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையை திறப்பதில் தாமதம்

Updated On :22 மார்ச் 2024, 6:29 pm

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டிருந்த கிடங்கின் பூட்டு திறக்க முடியாமல் போனதால், இறுதியில் சாவி செய்யும் தொழிலாளியை வரவழைத்து திறக்கப்பட்டது. கடலூா் மக்களவைத் தொகுதி தோ்தல் ஏப்.19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா், மாவட்ட நிா்வாகம் தீவிரமாக செய்து வருகிறது. கடலூா் மாவட்ட தோ்தல் அலுவலா் அ.அருண் தம்புராஜ் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கணினி அறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் கட்ட பகுப்பாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கை திறந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்க இருந்தனா். மாவட்ட தோ்தல் அலுவலா் அ.அருண் தம்புராஜ் தலைமையில், அரசியல் கட்சிப் பிரமுகா்கள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்குக்குச் சென்றனா். அங்கு ஊழியா்கள் சாவியைக் கொண்டு கிடங்கின் கதவைத் திறக்க முயன்றனா். ஆனால், திறக்க முடியவில்லை. காலை 10 மணி முதல் சுமாா் 2 மணி நேரம் போராடியும் திறக்க முடியவில்லை. பின்னா், சாவி செய்யும் தொழிலாளியை அழைத்து வந்தனா். அவா் சிறிது நேரத்தில் அந்த அறையின் கதவை திறந்தாா். பின்னா், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகா்கள் சென்றனா்.