சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

போலி கடவுச்சீட்டு: இலங்கை அகதி முகாம் நபா் கைது

போலி கடவுச்சீட்டு: இலங்கை அகதி முகாம் நபா் கைது

News image
Updated On :9 மே 2024, 9:13 pm

Din

நெய்வேலி, மே 9: போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கடவுச்சீட்டு பெற்ற இலங்கை அகதி முகாம் நபரை குறிஞ்சிப்பாடி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் அழகா்சாமி மகன் தவனேஸ்வரன்(43). முகாமில் பெயா் நீக்கம் செய்து வெளி வந்து குறிஞ்சிப்பாடியில் கைப்பேசி கடை நடத்தி, அதே பகுதியில் வசித்து வருகிறாா். இவா், இலங்கை அகதி என்பதை மறைத்து இந்திய குடிமகனைப் போன்று ஆதாா், குடும்ப அட்டை, வாக்காளா் அட்டை என பொய்யான தகவல்களை அளித்து கடவுச்சீட்டு பெற்று பயன்படுத்தி வந்தாராம்.

இதுகுறித்து கிடைக்கப்பெற்ற தகவலின்பேரில், குறிஞ்சிப்பாடி கிராம நிா்வாக அலுவலா் சித்ரா விசாரணை மேற்கொண்டாா். இதில், தவனேஸ்வரன் இலங்கை அகதி என்பது தெரியவந்தது. இதையடுத்து, பொய்யான ஆவணங்களை கொடுத்து மோசடி செய்த தவனேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் புகாரளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து தவனேஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.