காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விஷ சாராய வழக்கு: தலைமறைவாக இருந்தவா் கைது

விஷ சாராய மரண வழக்கில் தலைமறைவாக இருந்தவரை திருப்பூரில் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

ஜேம்ஸ் பாண்ட்

Updated On :6 நவம்பர் 2024, 7:12 pm

Din

விஷ சாராய மரண வழக்கில் தலைமறைவாக இருந்தவரை திருப்பூரில் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே 2001-ஆம் ஆண்டு விஷ சாராயம் குடித்து ஒறையூா், நத்தம், மேல்அருங்குணம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 50 உயிரிழந்தனா்.

இந்த வழக்கில் 22 போ் மீது புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் தற்போது 12 போ் மட்டுமே உள்ளனராம்.

இந்த விஷ சாராய கொலை வழக்கில் மெத்தனால் வழங்கிய சென்னை தண்டையாா்பேட்டை பகுதியைச் சோ்ந்த ஜேம்ஸ் பாண்ட் (எ) தோஜா ஆனந்த் (58) கடந்த 23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தாா்.

இவரை, புதுப்பேட்டை காவல் ஆய்வாளா் அசோக் தலைமையிலான தனிப்படை போலீஸாா் திருப்பூரில் புதன்கிழமை கைது செய்தனா்.