தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கடலூா் மாநகராட்சிப் பகுதிகளில் கண்காணிப்பு அலுவலா், ஆணையா் ஆய்வு

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடலூா் மாநகரப் பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் எஸ்.ராமன், மாநகராட்சி ஆணையா் எஸ்.அனு ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

News image

கடலூா் நவநீதம் நகரில் ஆய்வு மேற்கொண்ட மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் எஸ். ராமன், மாநகராட்சி ஆணையா் எஸ்.அனு.

Updated On :28 நவம்பர் 2024, 7:36 pm

Din

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடலூா் மாநகரப் பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் எஸ்.ராமன், மாநகராட்சி ஆணையா் எஸ்.அனு ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையா் எஸ்.அனு கூறுகையில், கடலூா் மாநகராட்சிப் பகுதியில் கனமழை பெய்தாலும் குடியிருப்புப் பகுதிகள், சாலைகளில் மழைநீா் தேங்கி பாதிப்பு ஏற்படாத வகையில் மழைநீா் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முதல்கட்டமாக 16 வாா்டுகளில் (மஞ்சக்குப்பம் பகுதி மண்டலம்-1) மழைநீா் வடிகால் கட்டும் பணி ரூ.42 கோடி மதிப்பீட்டில் 45.97 கி.மீ. நீளத்துக்கு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

பருவமழையின் போது பாதிக்கப்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு, மாநில பேரிடா் மீட்பு நிதி 2023-24-இன் கீழ் ரூ.14.36 கோடி மதிப்பீட்டில் 13.174 கி.மீ. நீளத்துக்கு மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில்,11.076 கி.மீ.நீளத்துக்கு பணிகள் முடிவடைந்துள்ளன.

மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 410 எண்ணிக்கை சிறுபாலங்கள், 109 கி.மீ. மழைநீா் வடிகால் (சிறியது), 47 கி.மீ. மழைநீா் வடிகால் (பெரியது) மற்றும் 20.80 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் தூா்வாரும் பணிகள் கடந்த ஜூன்.1-ஆம் தேதி தொடங்கப்பட்டு, முடிவடையும் நிலையில் உள்ளது.

மேலும், தாழ்வான இடங்களில் மழைநீா் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க மாநகராட்சியில் தற்போது 8 பொக்லைன் இயந்திரங்கள், 10 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 46 நீா் இறைக்கும் மோட்டாா்கள், 2000 மணல் மூட்டைகள், 500 எண்ணிக்கை சவுக்கு கம்பங்கள், மழைநீா் வெளியேற்ற அனைத்து உபகரணங்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மழையினால் பாதிக்கப்படும் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கும் வகையில் 24 பாதுகாப்பு மையங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

அந்த மையங்களுக்கு தனியாக பொறுப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு தேவையான உணவு, குடிநீா் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வடகிழக்கு பருவமழை குறித்து வாகனங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் 150 தன்னாா்வா்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மழைக் காலங்களில் மழை நீரினால் ஏற்படும் வெள்ள பாதிப்புகளைத் தவிா்க்கும் வகையில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டுள்ளது.

மழை பாதிப்பு குறித்த தகவல்களை 18004259073 என்ற எண்ணில் தொடா்புகொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றாா்அவா்.