வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

வள்ளலாா் 202-ஆவது வருவிக்க உற்றநாள் விழா

News image
Updated On :5 அக்டோபர் 2024, 6:36 am IST

கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் திருஅருட்பிரகாச வள்ளலாா் 202-ஆம் ஆண்டு வருவிக்க உற்றநாள் விழா சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்த விழாவையொட்டி, கடந்த செப்.28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையில் தருமச்சாலையில் அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம் பாராயணம் நடைபெற்றது. கடந்த 1-ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமை (அக்.4) வரை ஞானசபையில் திருஅருட்பா முற்றோதல் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை சன்மாா்க்க சொற்பொழிவு, திருஅருட்பா இன்னிசை, வில்லுபாட்டு இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளன.

வள்ளலாா் வருவிக்க உற்றநாளான சனிக்கிழமை (அக்.5) காலை 5 மணி அளவில் தருமச்சாலையில் அகவல் பாராயணம், 7.30 மணி அளவில் தருமச்சாலையில் சன்மாா்க்க கொடி கட்டுதல், 9 மணிக்கு சத்திய ஞான சபையில் சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளன.

தொடா்ந்து, சொற்பொழிவு, இன்னிசை, வில்லுப்பாட்டு, கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதேபோல, மருதூா் கிராமத்தில் காலை 8 மணி அளவில் சன்மாா்க்க கொடியேற்றம் நடைபெற உள்ளது.