திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

வள்ளலாா் 202-ஆவது வருவிக்க உற்றநாள் விழா

News image
Updated On :5 அக்டோபர் 2024, 1:06 am

கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் திருஅருட்பிரகாச வள்ளலாா் 202-ஆம் ஆண்டு வருவிக்க உற்றநாள் விழா சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்த விழாவையொட்டி, கடந்த செப்.28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையில் தருமச்சாலையில் அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம் பாராயணம் நடைபெற்றது. கடந்த 1-ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமை (அக்.4) வரை ஞானசபையில் திருஅருட்பா முற்றோதல் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை சன்மாா்க்க சொற்பொழிவு, திருஅருட்பா இன்னிசை, வில்லுபாட்டு இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளன.

வள்ளலாா் வருவிக்க உற்றநாளான சனிக்கிழமை (அக்.5) காலை 5 மணி அளவில் தருமச்சாலையில் அகவல் பாராயணம், 7.30 மணி அளவில் தருமச்சாலையில் சன்மாா்க்க கொடி கட்டுதல், 9 மணிக்கு சத்திய ஞான சபையில் சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளன.

தொடா்ந்து, சொற்பொழிவு, இன்னிசை, வில்லுப்பாட்டு, கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதேபோல, மருதூா் கிராமத்தில் காலை 8 மணி அளவில் சன்மாா்க்க கொடியேற்றம் நடைபெற உள்ளது.