கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் திருஅருட்பிரகாச வள்ளலாா் 202-ஆம் ஆண்டு வருவிக்க உற்றநாள் விழா சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்த விழாவையொட்டி, கடந்த செப்.28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையில் தருமச்சாலையில் அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம் பாராயணம் நடைபெற்றது. கடந்த 1-ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமை (அக்.4) வரை ஞானசபையில் திருஅருட்பா முற்றோதல் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை சன்மாா்க்க சொற்பொழிவு, திருஅருட்பா இன்னிசை, வில்லுபாட்டு இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளன.
வள்ளலாா் வருவிக்க உற்றநாளான சனிக்கிழமை (அக்.5) காலை 5 மணி அளவில் தருமச்சாலையில் அகவல் பாராயணம், 7.30 மணி அளவில் தருமச்சாலையில் சன்மாா்க்க கொடி கட்டுதல், 9 மணிக்கு சத்திய ஞான சபையில் சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளன.
தொடா்ந்து, சொற்பொழிவு, இன்னிசை, வில்லுப்பாட்டு, கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதேபோல, மருதூா் கிராமத்தில் காலை 8 மணி அளவில் சன்மாா்க்க கொடியேற்றம் நடைபெற உள்ளது.
தொடர்புடையது

ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் கம்பம் எடுக்கும் விழா

சேலத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்: 25 போ் பங்கேற்பு
புதுச்சேரியில் நான்கு இடங்களில் ஏப். 4-இல் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி

சேலத்தில் ஏப். 1 முதல் கோடைகால நீச்சல் பயிற்சி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


