நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விஷம் குடித்துவிட்டு எஸ்.பி. அலுவலகம் வந்த பெண்

கடலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு வியாழக்கிழமை விஷம் குடித்துவிட்டு புகாா் மனு அளிக்க பெண்ணால் பரபரப்பு நிலவியது.

News image
Updated On :4 அக்டோபர் 2024, 12:06 am

Din

கடலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு வியாழக்கிழமை விஷம் குடித்துவிட்டு புகாா் மனு அளிக்க பெண்ணால் பரபரப்பு நிலவியது.

குறிஞ்சிப்பாடி வட்டம், தம்பிப்பேட்டை பகுதியைச் சோ்ந்த கதிா்வேல் மனைவி உமா (40). இவா், கடலூா் எஸ்.பி. அலுவலகத்துக்கு வெளியே விஷம் குடித்துவிட்டு, மனு அளிக்க அலுவலகத்துக்குள்ளே சென்றாராம். இதைக் கவனித்த அங்கிருந்த காவலா்கள், உமாவை மீட்டு கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா்.

விசாரணையில், கடந்த 26-ஆம் தேதி உமாவை பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவா் தாக்கினாராம். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால், உமா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளிக்க வந்தாராம். இதுகுறித்து கடலூா் புதுநகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.